செய்திகள்
கைது

சீர்காழி பகுதியில் சூதாடிய 13 பேர் கைது

Published On 2020-04-25 07:47 GMT   |   Update On 2020-04-25 07:47 GMT
நாகை மாவட்டம் சீர்காழி பகுதியில் பணம் வைத்து சூதாடிய 13 பேரை போலீசார் கைது செய்தனர்.
சீர்காழி:

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதையடுத்து அதனை பின்பற்றாமல் விதிமீறி செயல்படுபவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர்.

அதன்படி சீர்காழி இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் ரோந்து சென்றபோது நிம்மேலி பகுதியில் கூட்டமாக மரத்தடியில் அமர்ந்திருந்தவர்களை சுற்றி வளைத்தனர்.

அவர்கள் பணம் வைத்து சீட்டுக்கட்டு விளையாடியது தெரியவந்தது. இதில் 6 பேரை போலீசார் கைது செய்தனர். அதேபோல் சூரக்காடு பகுதியில் சீட்டாடிய 7 பேரை கைது செய்தனர்.
Tags:    

Similar News