செய்திகள்
கைது

வேதாரண்யம் அருகே சாராயம் விற்ற வாலிபர் கைது

Published On 2020-04-21 12:37 GMT   |   Update On 2020-04-21 12:37 GMT
வேதாரண்யம் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சாராயம் விற்ற வாலிபரை கைது செய்தனர்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் மற்றும் போலீசார் செம்போடை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது செம்போடை மகராஜபுரம் சுந்தேரசன் (வயது42) தன் வீட்டிற்கு அருகே சாராயம் விற்பனை செய்தது தெரியவந்தது. 

இதையடுத்து அவர் மீது வழக்குபதிவு கைது செய்தனர். சாராயத்தை கைப்பற்றி அழித்தனர்.

Tags:    

Similar News