செய்திகள்
வாணியம்பாடி அருகே பா.ம.க. பிரமுகர் வீட்டுக்கு தீ வைப்பு- 2 பைக் எரிந்து நாசம்
வாணியம்பாடி அருகே பாமக பிரமுகர் வீட்டுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இதில் 2 பைக் எரிந்து நாசமானது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வாணியம்பாடி:
அம்பலூர் அருகே உள்ள அரப்பாண்ட குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜன் பா.ம.க பிரமுகர். இவருடைய வீட்டின் அருகே செட் அமைத்து அதில் அவரது 2 பைக் மற்றும் சைக்கிளை நிறுத்தி வைத்திருந்தார்.
நேற்று இரவு மர்ம நபர்கள் அந்த செட்டுக்கு தீ வைத்தனர்.
இதில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக் மற்றும் ஒரு சைக்கிள் எரிந்து நாசமானது.
இதுகுறித்து நாகராஜன் அம்பலூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.