செய்திகள்
மரணம்

வேலூரில் முன்னாள் படைவீரர் அலுவலக பெண் ஊழியர் மர்ம மரணம்

Published On 2020-03-20 10:35 GMT   |   Update On 2020-03-20 10:35 GMT
வேலூரில் முன்னாள் படைவீரர் அலுவலக பெண் ஊழியர் மர்மமான முறையில் இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:

வேலூர் கொசப்பேட்டை கந்தசாமி ஜமீன்தார் தெருவை சேர்ந்தவர் வேலு. இவரது மனைவி தமிழரசி (வயது 38). கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார். குழந்தைகள் இல்லை. வேலூரில் உள்ள முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 18-ந்தேதி வேலை முடிந்து தமிழரசி வீட்டுக்குச் சென்றுள்ளார். நேற்று அலுவலகத்தில் இருந்து அவருக்கு போன் செய்தனர். அவர் போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அலுவலக ஊழியர்கள் அவரது வீட்டுக்குச் சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் உள்ள கட்டிலில் தமிழரசி இறந்து கிடந்தார்.

இதுகுறித்து தெற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரது சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News