செய்திகள்
கொரோனா வைரஸ்

அந்தியூர் பகுதியில் இருந்து சிங்கப்பூர் சென்று திரும்பிய 3 பேருக்கு கொரோனா பரிசோதனை

Published On 2020-03-18 11:33 GMT   |   Update On 2020-03-18 11:33 GMT
சின்னதம்பிபாளையம் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் சக்தி கிருஷ்ணன் தலைமையில் சென்ற மருத்துவ குழுவினர் மலேசியாவில் இருந்து சொந்த ஊர் திரும்பிய 3 பேரை பரிசோதனை செய்தனர்.

அந்தியூர்:

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வெளிநாடுகளில் இருந்து திரும்புபவர்கள் விமான நிலையத்தில் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள தவிட்டுப்பாளையத்தை சேர்ந்த ஒருவர், பொய்யேரி கரையை சேர்ந்த 2 பேர் என 3 பேர் மலேசியாவுக்கு சுற்றுலா சென்றனர்.

அவர்கள் இன்று சொந்த ஊர் திரும்பினார்கள். இந்த தகவல் கிடைத்ததும் சுகாதாரத்துறையினர் அவர்களது வீட்டிற்கு விரைந்து சென்றனர். சின்னதம்பி பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் சக்தி கிருஷ்ணன் தலைமையில் சென்ற மருத்துவ குழுவினர் மலேசியாவில் இருந்து சொந்த ஊர் திரும்பிய 3 பேரை பரிசோதனை செய்தனர்.

அப்போது அவர்கள் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது தெரிய வந்தது. ஆனாலும் அவர்களை சுகாதாரத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News