செய்திகள்
கோப்பு படம்

ஒடுகத்தூர் அருகே மனைவி மீது மண்எண்ணை ஊற்றி தீ வைத்த தொழிலாளி கைது

Published On 2020-03-07 17:56 IST   |   Update On 2020-03-07 17:56:00 IST
ஒடுகத்தூர் அருகே குடும்ப தகராறில் மனைவி மீது மண்எண்ணை ஊற்றி தீ வைத்த தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அணைக்கட்டு:

ஒடுகத்தூர் அடுத்த சத்தாத்தூர் மலை கிராமத்தை சேர்ந்தவர் அன்பு இவரது மனைவி அனிதா (வயது25) இவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

குழந்தைகள் இல்லை இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்தநிலையில் கடந்த 3-ந் தேதி இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்த அன்பு மனைவியை அடித்து துன்புறுத்தி தகராறு செய்துள்ளார்.

இந்நிலையில் 4-ந் தேதி காலை 10 மணிக்கு வீட்டில் இருந்த அனிதா மீது மண் எண்ணையை ஊற்றி அன்பு தீ வைத்துள்ளார். இதனால் உடல் முழுவதும் தீபற்றி எரிந்தது வலிதாங்காமல் அனிதா அலறினார்.

அனிதாவின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் வந்து அனிதா மீதுதண்ணீர் ஊற்றி அணைத்து அவரை சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அனிதா வேப்பங்குப்பம் போலீசில் புகார் அளித்தார் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் வழக்குப்பதிவு செய்து அன்புவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News