செய்திகள்
விஷம்

குடியாத்தம் அருகே இளம்பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை

Published On 2020-02-27 10:22 GMT   |   Update On 2020-02-27 10:22 GMT
குடியாத்தம் அருகே குடும்ப தகராறு காரணமாக இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியாத்தம்:

குடியாத்தம் அடுத்த பரதராமி ரங்கசமுத்திரத்தை சேர்ந்தவர் டெல்லிகுமார் (28). ஆந்திர மாநிலம் பங்காரு பாளையம் அடுத்த ராகிமான பெண்டாவை சேர்ந்த ரவி மகள் விஜயகுமாரி (24).

டெல்லி குமாருக்கும், விஜயகுமாரிக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் மீண்டும் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தியடைந்த விஜயகுமாரி வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

இதனை கண்ட அவரது உறவினர்கள் விஜயகுமாரியை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து குடியாத்தம் டி.எஸ்.பி. சரவணன், பரதராமி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சீனிவாசன், சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
Tags:    

Similar News