செய்திகள்
போராட்டம்

மானாமதுரையில் மணல் திருட்டை தடுக்க வலியுறுத்தி போராட்டம் நாளை நடக்கிறது

Published On 2020-02-24 09:32 GMT   |   Update On 2020-02-24 09:32 GMT
மானாமதுரை வைகை ஆற்றில் மணல் கொள்ளையை தடுக்க வலியுறுத்தி மானாமதுரை பேரூராட்சி அலுவலகம் முன்பு அனைத்து கட்சி போராட்டம் நாளை (25-ந்தேதி) நடக்கிறது.

மானாமதுரை:

மானாமதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றியக்குழு அலுவலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் தி.க. மாவட்ட செயலாளர் ஆனந்தவேல் தலைமையில் நடந்தது.

தி.மு.க. நகர் செயலாளர் பொன்னுச்சாமி, இளைஞரணி செயலாளர் சுந்தர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் ஆண்டி, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் வீரையா, முனியராஜ், ராஜாராமன், முருகானந்தம்.

ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் அசோகன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நகர் செயலாளர் நாகராஜன், காங்கிரஸ் கட்சி தலைவர் பழனிவேல், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் மாணிக்கம், நகர் செயலாளர் செல்வராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பபெற வேண்டும், மானாமதுரை வைகை ஆற்றில் தொடர் மணல் திருட்டு நடந்து வருகிறது. இந்த வைகை ஆற்றில்தான் குடிதண்ணீர் பல்வேறு பகுதிகளுக்கு எடுத்து அனுப்பப்படுகிறது.

ஒரு நாளைக்கு ஒரு கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது. குடிதண்ணீருக்கு ஆதாரமாக உள்ள வைகையில் மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதனை வலியுறுத்தி நாளை (25-ந்தேதி) பேரூராட்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News