செய்திகள்
கடைகளில் கொள்ளை முயற்சி

செங்கல்பட்டு பஜார் வீதியில் ஒரே நாளில் 7 கடைகளில் கொள்ளை முயற்சி

Published On 2020-02-14 06:57 GMT   |   Update On 2020-02-14 06:57 GMT
செங்கல்பட்டு பஜார் வீதியில் ஒரே நாளில் 7 கடைகளில் கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு:

செங்கல்பட்டு நெல்லு மண்டி அருகே உள்ள பஜார் வீதியில் ஏராளமான கடைகள் உள்ளன.

நேற்று இரவு இங்கு உள்ள கடைகளின் உரிமையாளர்கள் கடைகளை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றனர். இன்று காலை வழக்கம் போல் கடைகளை திறக்க வந்தனர்.

அப்போது 7 கடைகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்தன. கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது கொள்ளை முயற்சி நடந்தது தெரிய வந்தது.

பூட்டுகள் உடைக்கப்பட்ட கடைகளில் ஒன்றில் ரூ.35 ஆயிரத்தை கொள்ளையர்கள் திருடிச் சென்றனர். மற்ற கடைகளில் பணம் இல்லாததால் கொள்ளையர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர். ஒரே நாள் இரவில் நடந்த இந்த கொள்ளை முயற்சி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News