செய்திகள்
செங்கல்பட்டு மாவட்ட வார்டு மறுவரையறை கருத்து கேட்பு கூட்டம்
செங்கல்பட்டு மாவட்ட வார்டு மறுவரையறை கருத்து கேட்பு கூட்டம் வருகிற 15-ந் தேதி காலை 10 மணி அளவில் செங்கல்பட்டில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி கலையரங்கில் நடைபெற உள்ளது.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 8 நகராட்சி வார்டுகள், 12 பேரூராட்சி வார்டுகள் மற்றும் 8 ஊராட்சி ஒன்றியங்களில் அடங்கிய கிராம ஊராட்சி வார்டுகள், ஊராட்சி ஒன்றி வார்டுகள் மற்றும் மாவட்ட ஊராட்சி ஒன்றிய வார்டுகள் மற்றும் மாவட்ட ஊராட்சி வார்டுகளின் வரைவு மறுவரையறை விவரங்கள் கடந்த 1-ந் தேதி வெளியிடப்பட்டது.
இதன் மீது பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கருத்துகளை கடந்த 8-ந்தேதி வரை மனுக்கள்பெறப்பட்டது. இக்கருத்துகளின் மீது விவாதித்து முடிவு செய்ய பொது மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கருத்து கேட்பு கூட்டம் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான்லூயிஸ் தலைமையில் வருகிற 15-ந் தேதி காலை 10 மணி அளவில் செங்கல்பட்டில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி கலையரங்கில் நடைபெற உள்ளது.