செய்திகள்
துப்பாக்கி, கத்தியுடன் மாணவர்கள் மோதல்- 8 பேர் கைது
துப்பாக்கி, பட்டாக்கத்தியுடன் ஒருவரை ஒருவர் மோதிக்கொண்ட பல்கலைக்கழக மாணவர்கள் 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
செங்கல்பட்டு:
பொத்தேரியில் உள்ள தனியார் பல்கலைக்கழத்தில் நேற்று முன்தினம் மாலை எம்.பி.ஏ. 2-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் இரு தரப்பாக மோதிக்கொண்டனர்.
பட்டாக்கத்தி, துப்பாக்கியுடன் மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் பல்கலைக்கழகத்திற்கு சென்று மாணவர்களிடம் அதிரடி விசாரணை நடத்தினர். போலீசாரின் நடவடிக்கையை தொடர்ந்து மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
இந்த நிலையில் மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் மாரிகார்த்திக், ஆதித்யன், மவுலானா அலி, ராகேஷ், விஷ்ணு, லலித்பிராத், ராஜீ உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர் அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த மோதல் தொடர்பாக மேலும் சில மாணவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
இதற்கிடையே மோதலின்போது மாணவர் ஒருவர் வைத்திருந்தது. கைத்துப்பாக்கி அல்ல அது ‘சிகரெட் லைட்டர்’ என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பொத்தேரியில் உள்ள தனியார் பல்கலைக்கழத்தில் நேற்று முன்தினம் மாலை எம்.பி.ஏ. 2-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் இரு தரப்பாக மோதிக்கொண்டனர்.
பட்டாக்கத்தி, துப்பாக்கியுடன் மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் பல்கலைக்கழகத்திற்கு சென்று மாணவர்களிடம் அதிரடி விசாரணை நடத்தினர். போலீசாரின் நடவடிக்கையை தொடர்ந்து மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
இந்த நிலையில் மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் மாரிகார்த்திக், ஆதித்யன், மவுலானா அலி, ராகேஷ், விஷ்ணு, லலித்பிராத், ராஜீ உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர் அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த மோதல் தொடர்பாக மேலும் சில மாணவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
இதற்கிடையே மோதலின்போது மாணவர் ஒருவர் வைத்திருந்தது. கைத்துப்பாக்கி அல்ல அது ‘சிகரெட் லைட்டர்’ என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.