செய்திகள்
தாம்பரம் அருகே வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் கொள்ளை
தாம்பரம் அருகே வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாம்பரம்:
தாம்பரம் அருகேயுள்ள நெடுங்குன்றம் தேவராஜ் நகர் முதல் தெருவை சேர்ந்தவர் துரைமுருகன். கூடுவாஞ்சேரியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார் கடந்த 24-ந்தேதி உறவினர் திருமணத்திற்காக வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்தார்.
இன்று காலை வீட்டிற்கு திரும்பி வந்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைந்து கிடந்தது. பீரோவில் இருந்த 20 பவுன் தங்க நகைகள், ரூ.20 ஆயிரம் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருந்தனர். இதுகுறித்து பீர்க் கன்காரணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.