செய்திகள்
அம்பை சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. சக்திவேல் முருகன் மரணம்
நெல்லை மாவட்டம் அம்பை சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. சக்திவேல் முருகன் இன்று காலை மரணமடைந்தார்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள அடையக்கருங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல்முருகன். அ.திமு.க.வைச் சேர்ந்த இவர் நெல்லை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. அண்ணா தொழிற்சங்க செயலாளராக இருந்தார். இவர் அம்பை சட்டமன்ற தொகுதியில் கடந்த 2001முதல்-2006 வரை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக பதவி வகித்தார்.
இன்று காலை 8 மணியளவில் அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்து விட்டார்.
மரணமடைந்த சக்திவேல் முருகனின் மனைவி முத்துலெட்சுமி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு 2 மகள்கள், 1 மகன் உள்ளனர். மகன் மகாகிருஷ்ணன் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் உதவி மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள அடையக்கருங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல்முருகன். அ.திமு.க.வைச் சேர்ந்த இவர் நெல்லை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. அண்ணா தொழிற்சங்க செயலாளராக இருந்தார். இவர் அம்பை சட்டமன்ற தொகுதியில் கடந்த 2001முதல்-2006 வரை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக பதவி வகித்தார்.
இன்று காலை 8 மணியளவில் அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்து விட்டார்.
மரணமடைந்த சக்திவேல் முருகனின் மனைவி முத்துலெட்சுமி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு 2 மகள்கள், 1 மகன் உள்ளனர். மகன் மகாகிருஷ்ணன் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் உதவி மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.