செய்திகள்
முன்னாள் எம்எல்ஏ சக்திவேல் முருகன்

அம்பை சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. சக்திவேல் முருகன் மரணம்

Published On 2020-01-03 06:09 GMT   |   Update On 2020-01-03 06:09 GMT
நெல்லை மாவட்டம் அம்பை சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. சக்திவேல் முருகன் இன்று காலை மரணமடைந்தார்.
நெல்லை:

நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள அடையக்கருங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல்முருகன். அ.திமு.க.வைச் சேர்ந்த இவர் நெல்லை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. அண்ணா தொழிற்சங்க செயலாளராக இருந்தார். இவர் அம்பை சட்டமன்ற தொகுதியில் கடந்த 2001முதல்-2006 வரை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக பதவி வகித்தார்.

இன்று காலை 8 மணியளவில் அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்து விட்டார்.

மரணமடைந்த சக்திவேல் முருகனின் மனைவி முத்துலெட்சுமி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு 2 மகள்கள், 1 மகன் உள்ளனர். மகன் மகாகிருஷ்ணன் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் உதவி மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
Tags:    

Similar News