செய்திகள்
முதல்வர் பழனிசாமி - பிரதமர் மோடி

சூடான் தீ விபத்து - தமிழர்களின் நிலை குறித்து அறிய பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

Published On 2019-12-04 15:53 GMT   |   Update On 2019-12-04 15:53 GMT
சூடான் நாட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் காணாமல் போன தமிழர்கள் விவகாரத்தில் உண்மை நிலையை கண்டறிய வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை:

சூடான் நாட்டில் செராமிக் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களில் 18 பேர் இந்தியர்கள் என வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், சூடான் நாட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் தமிழர்கள் காணாமல் போனதாக கூறப்படும் விவகாரத்தில் உண்மை நிலையை கண்டறிய வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், சூடான் நாட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் தமிழர்கள் காணாமல் போனதாக கூறப்படும் விவகாரத்தில் உண்மை நிலையை கண்டறிய வேண்டும். மேலும் அங்குள்ள இந்திய தூதரகம் மூலம் காணாமல் போன தமிழர்களை மீட்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Tags:    

Similar News