செய்திகள்
ஆம்பூர் தண்ணீர் பேரலில் விழுந்து குழந்தை பலி
ஆம்பூர் அருகே தண்ணீர் பேரலில் தவறி விழுந்து 4 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆம்பூர்:
ஆம்பூர் அருகே உள்ள வீராங்குப்பத்தை சேர்ந்தவர் வீரமணி என்கிற செல்வபாண்டியன் முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவர். இவரது மனைவி ரம்யா, வெங்கடசமுத்திரம் தபால் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார்.
இத்தம்பதிக்கு 3 மகள்கள். 2-வது மகள் யுவந்திகா (வயது4). இன்று காலை செல்வபாண்டியன் தம்பதியினர் வேலைக்கு சென்று விட்டனர். யுவந்திகா அவரது பாட்டி கண்காணிப்பில் இருந்தார். பாட்டி வீட்டின் அருகே துணி துவைத்துக் கொண்டிருந்தார்.
அப்போது யுவந்திகா அருகே விளையாடிக் கொண்டிருந்தார். துவைத்த துணிகளை காயப்போடுவதற்காக பாட்டி சென்றார்.
அந்த நேரத்தில் தண்ணீர் பேரனை எட்டிப்பார்த்த யுவந்திகா அதற்குள் தவறி விழுந்து விட்டார். மூச்சுத் திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
திரும்பி வந்த பாட்டி குழந்தை பேரலுக்குள் கிடந்ததை கண்டு திடுக்கிட்டார். அவரை தூக்கிக் கொண்டு ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
உமராபாத் போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆம்பூர் அருகே உள்ள வீராங்குப்பத்தை சேர்ந்தவர் வீரமணி என்கிற செல்வபாண்டியன் முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவர். இவரது மனைவி ரம்யா, வெங்கடசமுத்திரம் தபால் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார்.
இத்தம்பதிக்கு 3 மகள்கள். 2-வது மகள் யுவந்திகா (வயது4). இன்று காலை செல்வபாண்டியன் தம்பதியினர் வேலைக்கு சென்று விட்டனர். யுவந்திகா அவரது பாட்டி கண்காணிப்பில் இருந்தார். பாட்டி வீட்டின் அருகே துணி துவைத்துக் கொண்டிருந்தார்.
அப்போது யுவந்திகா அருகே விளையாடிக் கொண்டிருந்தார். துவைத்த துணிகளை காயப்போடுவதற்காக பாட்டி சென்றார்.
அந்த நேரத்தில் தண்ணீர் பேரனை எட்டிப்பார்த்த யுவந்திகா அதற்குள் தவறி விழுந்து விட்டார். மூச்சுத் திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
திரும்பி வந்த பாட்டி குழந்தை பேரலுக்குள் கிடந்ததை கண்டு திடுக்கிட்டார். அவரை தூக்கிக் கொண்டு ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
உமராபாத் போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.