செய்திகள்
சிறுமி அனிஷா

ஜோலார்பேட்டை அருகே மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பலி

Published On 2019-10-29 09:05 GMT   |   Update On 2019-10-29 09:05 GMT
ஜோலார்பேட்டை அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி பலியான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை அருகே உள்ள புல்லானேரி பாட்டன் வட்டம் கிராமத்தை சேர்ந்தவர் சவுந்தர். கூலித்தொழிலாளி. இவரது மனைவி பவித்ரா. தம்பதிக்கு 3 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் அனுஷா (வயது5). அச்சமங்கலத்தில் உள்ள அவரது பாட்டி வீட்டில் தங்கி திருப்பத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தார்.

அனுஷாவிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. அவரை திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். நேற்று முன்தினம் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். ஆனால் திடீரென அவருக்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் ஆனது.

இதனையடுத்து மீண்டும் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை சிறுமி பரிதாபமாக இறந்தார்.

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. வேலூர் மாவட்டத்தில் டெங்கு மற்றும் காய்ச்சலால் குழந்தைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.




Tags:    

Similar News