செய்திகள்
மழை

வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் பலத்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி

Published On 2019-10-24 16:13 IST   |   Update On 2019-10-24 16:13:00 IST
வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் ஏரிகளில் மழைநீர் தேங்கி வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் நேற்று இரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய தொடங்கியது. காவேரிபாக்கம், வாலாஜா, மேல் ஆலத்தூர், காட்பாடி, வடபுதுப்பட்டு, சோளிங்கர், ஆற்காடு, ஆம்பூர் ஆகிய இடங்களில் மழை கொட்டி தீர்த்தது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை நீடித்ததால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

வாணியம்பாடி, ஆலங்காயம், அரக்கோணம் ஆகிய பகுதியில் லேசான சாரல் மழை பெய்தது .மற்ற இடங்களில் பலத்த மழை பெய்தது. திருப்பத்தூரில் மழை இல்லை. தொடர் மழையால் ஏரிகளிலும் மழைநீர் தேங்கி வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

வேலூர்- 37.3

வாணியம்பாடி- 3.4

ஆலங்காயம்- 3.2

அரக்கோணம்-5.2

காவேரிப்பாக்கம்- 66.6

வாலாஜா- 49.4

ஆற்காடு- 44.2

மேல் ஆலத்தூர்- 48.6

காட்பாடி- 53.2

அம்முண்டி- 25.2

கேத்தாண்டபட்டி- 67.2

வடபுதுபட்டு- 65.2

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்றிரவு பரவலாக மழை பெய்தது. போளூர் சேத்துப்பட்டு வந்தவாசி கலசப்பாக்கம் ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. இதனால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்தது. திருவண்ணாமலை தண்டராம்பட்டு பகுதிகளில் சாரல் மழை மட்டுமே பெய்தது.

சாத்தனூர் அணைக்கு 694 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது அணையின் நீர்மட்டம் இன்று காலை 84.6 கன அடியாக இருந்தது 59.04 அடி கொண்ட குப்பநத்தம் அணையில் இருந்து 250 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு நீர்வரத்து இல்லை. இதனால் அணையின் நீர்மட்டம் 38.21 கன அடியாக குறைந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

சாத்தனூர் அணை- 4.2

போளூர்- 40.2

திருவண்ணாமலை- 3.1

சேத்துப்பட்டு- 33.2

கீழ்பென்னாத்தூர்- 3.2

வெம்பாக்கம்- 74

Similar News