செய்திகள்
தற்கொலை

தண்டலத்தில் அரசு ஊழியர் தற்கொலை

Published On 2019-10-17 06:26 GMT   |   Update On 2019-10-17 06:26 GMT
திருப்போரூர் அடுத்த தண்டலத்தில் மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் அரசு ஊழியர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்போரூர்:

திருப்போரூரை அடுத்த தண்டலம் பகுதியில் வசித்து வருபவர் உமாபதி (வயது 44). இவருக்கு விஜயா என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர். உமாபதி செங்கல்பட்டு கால்நடை மருத்துவமனையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

சரியாக வேலைக்கு செல்லாமல் அடிக்கடி குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்துள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மனைவியிடம் தகராறு செய்யவே மனைவி கோபித்துக்கொண்டு தனது குழந்தைகளுடன் அதே பகுதியில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்த விரக்தியில் இருந்த உமாபதி கடந்த 2 நாட்களுக்கு முன்பு குடித்துவிட்டு தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News