செய்திகள்
கோப்பு படம்

போதிய பயணிகள் இல்லாததால் சென்னை-திருச்சிக்கு 2 விமானங்கள் ரத்து

Published On 2019-10-16 07:51 GMT   |   Update On 2019-10-16 07:51 GMT
போதிய பயணிகள் இல்லாததால் சென்னை - திருச்சிக்கு செல்ல வேண்டிய விமானம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
ஆலந்தூர்:

சென்னையில் இருந்து திருச்சிக்கு இன்று அதிகாலை 4.55 மணிக்கு செல்ல வேண்டிய இன்டிகோ விமானம், திருச்சியில் இருந்து சென்னைக்கு காலை 8.50 மணிக்கு வர வேண்டிய இன்டிகோ விமானம் ஆகிய 2 விமானங்கள் போதிய பயணிகள் இல்லாததால் இன்று ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

சென்னையில் இருந்து மதுரைக்கு காலை 9 மணிக்கு செல்ல வேண்டிய ஏர்இந்தியா விமானம் எந்திர கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்த விமானத்தில் செல்ல இருந்த 49 பயணிகள் மாற்று விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
Tags:    

Similar News