செய்திகள்
தற்கொலை

டி.என்.பாளையம் அருகே மூதாட்டி தீக்குளித்து தற்கொலை

Published On 2019-10-15 14:32 GMT   |   Update On 2019-10-15 14:32 GMT
டி.என்.பாளையம் அருகே உடலில் மண்எண்ணை ஊற்றி மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டி.என்.பாளையம்:

டி.என்.பாளையம் அடுத்த கள்ளிப்பட்டி வடக்கு வீதியை சேர்ந்தவர் பாப்பாத்தி என்கிற தவசியம்மாள் (வயது 78). இவரின் கணவரும் முதல் மகனும் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில் தற்போது மகன் பகவதி (வயது 60) மற்றும் மகள் ஒருவரும் வெவ்வேறு ஊர்களில் உள்ளனர்.

தனியாக வசிக்கும் தனது வயதான அம்மாவை கவனித்து கொள்ள கள்ளிப்பட்டியை சேர்ந்த புஷ்பா என்ற பெண்ணை சம்பளத்திற்கு மகன் பகவதி சேர்த்துள்ளார்.

வயது முதிர்வு காரணமாக தவசியம்மாளுக்கு உடல் ரீதியான பல பிரச்சனைகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், வேலையாள் புஷ்பா மளிகை சாமான்கள் வாங்க சென்றுவிட்டு சுமார் அரைமணி நேரம் கழித்த வீடு திரும்பியவர் வீட்டுக்குள் நெருப்பு புகை வருவதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

உடனே அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் பூட்டப்பட்ட கதவை திறந்து பாத்தபோது தவசியம்மாள் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். மண்ணெண்ணெய் கேன் அருகில் கிடந்ததால் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததாக தெரிகிறது.

கோபி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்ற தவசியம்மாளின் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. இது குறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News