செய்திகள்
கொள்ளை

சீர்காழி அருகே பூட்டிக்கிடந்த வீட்டில் நகை கொள்ளை

Published On 2019-09-09 09:13 GMT   |   Update On 2019-09-09 09:13 GMT
சீர்காழி அருகே பூட்டிக்கிடந்த வீட்டில் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சீர்காழி:

நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள விளந்திடசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் லோகேஸ்வரி (வயது 65). இவர் சம்பவத்தன்று உடல்நிலை சரியில்லாமல் இருந்த தனது பேரனை பார்க்க வெளியூர் புறப்பட்டு சென்றனர்.

இதையடுத்து இன்று காலையில் லோகேஸ்வரி வீடு திரும்பிய போது முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 2 பவுன் செயின், பித்தளை விளக்கு ஆகியவை திருட்டு போய் இருந்ததை கண்டு திடுக்கிட்டார்.

இந்த திருட்டு சம்பவம் பற்றி அவர் சீர்காழி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பூட்டிக்கிடந்த வீட்டில் நகை திருடிய கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News