செய்திகள்
விபத்து

வேதாரண்யம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதி 3 வாலிபர்கள் பலி

Published On 2019-09-07 10:29 GMT   |   Update On 2019-09-07 10:29 GMT
வேதாரண்யம் அருகே விபத்தில் 3 வாலிபர்கள் பலியான சம்பவம் நாகை மாவட்ட மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வெள்ளப்பள்ளம் மீனவர் காலனியை சேர்ந்த முருகன் மகன் தினேஷ் (வயது 23), செல்வராஜ் மகன் செல்வம் (25), தங்கமணி மகன் அருண் (22) ஆகிய 3 பேரும் நேற்று இரவு ஒரு மோட்டர் சைக்கிளில் சென்றனர். தினேஷ் மோட்டார் சைக்கிளை ஓட்டினார். அவர்கள் வெள்ளப்பள்ளத்தில் இருந்து நாகப்பட்டினத்துக்கு சென்றனர். இதனால் பழங்கள்ளிமேட்டை சேர்ந்த கலியமூர்த்தி மகன் கருணாகரன் (27), காளியப்பன் மகன் குமரேசன்(26) ஆகிய இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் பழங்கள்ளிமேட்டில் இருந்து நாகப்பட்டினம் நோக்கி சென்றனர்.

தினேஷ் உள்பட 3 பேரும் சென்ற மோட்டார் சைக்கிள் வெள்ளப்பள்ளம் அருகே சென்ற போது முன்னால் சென்ற ஒரு காரை முந்த முயன்றனர். அப்போது எதிர்பாராத விதமாக கருணாகரன் சென்ற மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் 2 மோட்டார் சைக்கிள்களில் சென்ற 5 பேரும் படுகாயமடைந்தனர். இதில் தினேஷ், செல்வம், கருணாகரன் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதனை கண்ட வாகன ஓட்டிகள் உயிருக்கு போராடிய அருண், குமரேசன் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக திருவாருர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் வேதாரண்யம் டி.எஸ்.பி.சபியுல்லா, தலைஞாயிறு இன்ஸ்பெக்டர் சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பலியான 3 பேர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து பற்றிய புகாரின் பேரில் வேட்டைகாரனிருப்பு போலீசார் வழக்குப்பதிவு சேய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் 3 வாலிபர்கள் பலியான சம்பவம் நாகை மாவட்ட மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News