செய்திகள்
தற்கொலை

கீழ்வேளூர் அருகே தாய் திட்டியதால் வாலிபர் தற்கொலை

Published On 2019-09-02 12:36 GMT   |   Update On 2019-09-02 12:36 GMT
கீழ்வேளூர் அருகே வேலைக்கு செல்லாததை தாய் கண்டித்ததால் மனமுடைந்த வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நாகப்பட்டினம்:

நாகையை அடுத்த கீழ்வேளூர் அருகே நீலப்பாடி தாமரைகுளம் தெருவை சேர்ந்தவர் ஜோதி. இவரது மகன் பிரகதீஷ்வரன் (வயது 25). இவர் வேலைக்கு செல்லாமல் சுற்றி வந்தாக கூறப்படுகிறது.

இதையடுத்து ஜோதி அவரை கண்டித்து உள்ளார். இதில் மனமுடைந்த பிரகதீஷ்வரன் சம்பவத்தன்று காக்கழனி கிராமத்தில் உள்ள தனது சித்தி வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அருகே இருந்த மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கீழ்வேளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரகதீஷ்வரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News