செய்திகள்
சென்னை விமான நிலையம்

சிங்கப்பூர் விமானத்தில் திடீர் கோளாறு- 133 பயணிகள் உயிர்தப்பினர்

Published On 2019-08-06 14:23 IST   |   Update On 2019-08-06 14:23:00 IST
சென்னை விமான நிலைய ஓடு பாதையில் புறப்பட தயாராக இருந்த சிங்கப்பூர் விமானத்தில் ஏற்பட்ட கோளாறை கண்டுபிடித்ததால் 133 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
ஆலந்தூர்:

சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு நேற்று இரவு 9.55 மணிக்கு இண்டிகோ விமானம் புறப்பட தயாராக இருந்தது.

அதில் 133 பயணிகள் மற்றும் விமானிகள் உள்பட 6 ஊழியர்களும் இருந்தனர். விமானம் ஓடுபாதையில் சென்று கொண்டிருந்தபோது தொழில்நுட்ப கோளாறு இருப்பதை விமானி கண்டுபிடித்தார்.

இதையடுத்து உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் தெரிவித்தார். விமானத்தை மேலே கொண்டு செல்ல இயலாது. திரும்ப கொண்டுவர அனுமதிக்கும்படி கேட்டார். அதன்படி விமானத்தை தொடர்ந்து இயக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. இழுவை வாகனம் மூலம் அந்த விமானம் ஓடு பாதையில் இருந்து புறப்பட்ட இடத்திற்கு கொண்டு வரப்பட்டது.

பின்னர் தொழில்நுட்ப கோளாறை வல்லுனர்கள் சரி செய்தனர். 2 மணி நேரத்திற்கு பிறகு நள்ளிரவு 12 மணிக்கு அந்த விமானம் சிங்கப்பூர் புறப்பட்டு சென்றது. சரியான நேரத்தில் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால் அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டது. பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

Similar News