செய்திகள்
பொருட்கள் சிதறி கிடந்த காட்சி.

குடியாத்தத்தில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ள பள்ளியில் ரூ.3 லட்சம் பொருட்கள் திருட்டு

Published On 2019-08-04 06:50 GMT   |   Update On 2019-08-04 06:50 GMT
வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ள குடியாத்தம் அரசு பள்ளியில் ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு போனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடியாத்தம்:

குடியாத்தம் காந்திநகர் பகுதியில் அரசு திருமகள் கல்லூரி வளாகத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளியில் 11 கம்யூட்டர்கள் கொண்டு ஸ்மார்ட் வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது.

வேலூர் பாராளுமன்ற தேர்தலையொட்டி இப்பள்ளியில் 29, 30,32 வார்டுகளுக்கான வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு பள்ளியில் புகுந்த மர்ம கும்பல் ஸ்மார்ட் வகுப்பில் இருந்த 11 கம்யூட்டர்கள், பிரிண்டர், போன் மற்றும் தேர்தல் பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பி சென்று விட்டனர்.


இன்று காலை தேர்தல் பணிக்காக பள்ளிக்கு சென்ற அதிகாரிகள் பள்ளியின் 5 வகுப்பு அறைகளின் கதவுகள் உடைக்கப்பட்டு கம்யூட்டர்கள் மற்றும் பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் திருட்டு போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து குடியாத்தம் தாலுகா போலீசில் புகார் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜ் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி திருட்டு கும்பலை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News