செய்திகள்
தற்கொலை

தரங்கம்பாடி அருகே கள்ளக்காதலன் வீட்டில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை

Published On 2019-07-30 10:11 GMT   |   Update On 2019-07-30 10:11 GMT
நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே கள்ளக்காதலன் வீட்டில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தரங்கம்பாடி:

நாகை மாவட்டம் திருக்கடையூர் அருகே உள்ள சிங்கனோடை பாரதியார் தெருவை சேர்ந்தவர் சண்முக வடிவேல் (வயது 37). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சரிதா. இவர் களுக்கு 5 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் சண்முகவடிவேல், கள்ளக்குறிச்சியில் தங்கி ஒரு செங்கல்சூளையில் வேலை பார்த்தார். அப்போது அங்கு காஞ்சனா (32) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. காஞ்சனாவுக்கு ஏற்கனவே திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். சண்முக வடிவேலின் கள்ளக்காதல் விவகாரம், அவரது மனைவி சரிதாவுக்கு தெரிய வந்தது. இதனால் மனமுடைந்த அவர் கோபித்துக்கொண்டு தனது குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

இதன்பிறகு சண்முக வடிவேல், கள்ளக்காதலி காஞ்சனாவுடன் சிங்கனோடையில் தனிக்குடித்தனம் நடத்தி வந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு சண்முக வடிவேலும், காஞ்சனாவும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். பின்னர் காலையில் சண்முக வடிவேல் எழுந்து பார்த்த போது, வீட்டில் காஞ்சனா தூக்கில் பிணமாக தொங்கினார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து திருக்கடையூர் போலீசுக்கு தகவல் கொடுக்கார். அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

பின்னர் காஞ்சனா உடலை கைப்பற்றி மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் விசாரணையில் மன உளைச்சலால் காஞ்சனா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. கள்ளக்காதலன் சண்முக வடிவேல், தன்னை கைவிட்டு சென்று விடுவாரோ என்ற பயத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
Tags:    

Similar News