செய்திகள்
நாகை பகுதியில் சாராயம்-மதுபானம் கடத்திய 11 பேர் கைது
நாகை பகுதியில் சாராயம்-மதுபானம் கடத்திய 11 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தில் சாராயம் மற்றும் மது பாட்டில்கள் கடத்தி வருவதை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் உத்தரவிட்டதின் பேரில் போலீசார் தீவிர ரோந்து சென்று சாராயம் மது பாட்டில்கள் கடத்தி வருபவர்களை கைது செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன் தினம் நாகை மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர மதுவிலக்கு சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சாராயம், மது பாட்டில்கள் கடத்தி வந்த கடம்பர வாழ்க்கை கீழத் தெருவை சேர்ந்த மாரியம்மாள் (வயது 48), மாந்தை மெயின் சாலையை சேர்ந்த சாந்தி (46) உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து ஆயிரத்து 435 லிட்டர் சாராயமும், 205 மது பாட்டில்களும் கடத்தலுக்கு பயன்படுத்திய 3 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.