செய்திகள்
தற்கொலை

நாகை அருகே செல்போன் வாங்கி தர பெற்றோர் மறுத்ததால் வாலிபர் தற்கொலை

Published On 2019-07-29 11:37 GMT   |   Update On 2019-07-29 11:37 GMT
நாகை அருகே செல்போன் வாங்கி தர பெற்றோர் மறுத்ததால் மனமுடைந்த வாலிபர் எலி மருந்தை தின்று தற்கொலை செய்து கொண்டார்.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த கோகூர் தெற்கு பாப்பாகுடி பகுதியை சேர்ந்தவர் மனோகரன். இவருடைய மகன் தீனதயாளன் (வயது 19). சுமைதூக்கும் தொழிலாளி. இவர் தனக்கு செல்போன் வாங்கி தர சொல்லி அடிக்கடி பெற்றோரிடம் தகராறு செய்து வந்துள்ளார். அவரது பெற்றோர் வாங்கி தர மறுத்துள்ளனர்.

இதனால் மனமுடைந்து வீட்டில் வைத்திருந்த எலி மருந்தை தின்று மயங்கி விழுந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தீனதயாளன் இறந்தார்.

இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News