நாகையில் ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலி
நாகப்பட்டினம்:
நாகை புதிய கடற்கரை சாலையில் ரெயில்வே கேட் உள்ளது. அங்கு வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் வெளிப்பாளையம் கவரை தெருவை சேர்ந்த முரளி (வயது 34) என்பதும், தஞ்சை-காரைக்கால் ரெயிலில் அடிபட்டு இறந்ததும் தெரியவந்தது.
இதேபோல் நாகூர் ரெயில் நிலையத்தில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக நாகை ரெயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். இறந்து கிடந்தவர் வெள்ளை நிற அரைக்கை சட்டை அணிந்திருந்தார். இறந்தவர் யார்? எந்த ஊர்? என போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.