செய்திகள்
நகை, பணம் கொள்ளை

மயிலாடுதுறை அருகே திருமணத்துக்கு வாங்கிய நகை-பணம் கொள்ளை

Published On 2019-07-27 10:08 GMT   |   Update On 2019-07-27 10:08 GMT
மயிலாடுதுறை அருகே திருமணத்துக்கு வாங்கிய நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை:

மயிலாடுதுறை அருகே மாப்படுகை ஆர்.எம்.எஸ். காலனியை சேர்ந்தவர் ரவி(வயது 60). டிரைவர். தற்போது பணி ஓய்வு பெற்று வீட்டில் இருக்கிறார். இவரது மனைவி ஜெயந்தி.

ரவி தனது மகளுக்கு திருமணம் பேசி முடிவு செய்தார். மாப்பிள்ளை வீட்டுக்கு சீர்வரிசை கொடுப்பதற்காக தங்க நகைகள், ரூ. 1 லட்சம் ரொக்கம், புதிய மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை வாங்கி வைத்திருந்தார். இந்த நிலையில் அவர் தனது மனைவி மற்றும் மகளுடன் வெளியூர் சென்றார். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் கதவை உடைத்து வீட்டுக்குள்புகுந்து 9 பவுன் தங்க நகை, ரூ. 1 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். பின்னர் வீட்டின் முன் நிறுத்தி இருந்த 2 லட்சம் மதிப்புள்ள புது மோட்டார் சைக்கிள்களையும் திருடி சென்று விட்டனர்.

இதற்கிடையே வீடு திரும்பிய ரவி கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது மகள் திருமணத்துக்காக வாங்கிய நகை, பணம் கொள்ளை போனது தெரிய வந்தது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.4 லட்சம் ஆகும்.

இது குறித்து மயிலாடுதுறை போலீசில் ரவி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரித்தனர். கைரேகை நிபுணர்கள் வீட்டில் பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News