செய்திகள்
கைது

வேதாரண்யம் அருகே பள்ளியில் பூட்டை உடைத்து லேப்டாப் திருடிய 2 பேர் கைது

Published On 2019-07-24 09:57 GMT   |   Update On 2019-07-24 09:57 GMT
வேதாரண்யம் அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் பூட்டை உடைத்து லேப்டாப் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:

வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்குளம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. கடந்த ஆண்டு ஏற்பட்ட கஜா புயலால் இந்த பள்ளியில் சேதம் ஏற்பட்டு கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டது. தற்போது சீரமைப்பு பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்த பணியில் 10 பேர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பள்ளியின் கம்யூட்டர் அறை பூட்டு உடைக்கப்பட்டு 2 லேப்டாப் திருடு போனது.

இது குறித்து தலைமை ஆசிரியர் பழனிவேலன் வாய்மேடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுகுணா விசாரணை நடத்தினார். அதில் பள்ளி சீரமைப்பு பணியில் ஈடுபட்ட திருச்சி மாவட்டம் சிம்மராஜசமுத்திரத்தை சேர்ந்த சிவக்குமார் (வயது 22), வேலூரை சேர்ந்த கார்த்திக் (24) ஆகிய 2 பேர் லேப்டாப்பை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து சிவக்குமார் மற்றும் கார்த்திக் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News