செய்திகள்
விபத்து

திருக்குவளை அருகே கார் மோதி அ.தி.மு.க. நிர்வாகி பலி

Published On 2019-07-23 10:18 GMT   |   Update On 2019-07-23 10:18 GMT
வேளாங்கண்ணி அடுத்த திருக்குவளை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் அ.தி.மு.க. நிர்வாகி பரிதாபமாக உயிரிழந்தார்.
நாகப்பட்டினம்:

வேளாங்கண்ணி அடுத்த திருக்குவளை அருகே எட்டுக்குடி வல்லம் பகுதியை சேர்ந்தவர் காமராஜ் (வயது54). இவர் எட்டுக்குடி அ.தி.மு.க கிளைச் செயலாளராக இருந்தார்.

இந்த நிலையில் காமராஜ் ஈசனூரில் உள்ள தனது மகள் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்று கொண்டு இருந்தார். அப்போது நாகையில் இருந்து திருத்துறைப்பூண்டியை நோக்கி சென்ற கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயம் அடைந்த காமராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே காமராஜ் இறந்து விட்டதாக கூறினார். இதுகுறித்த புகாரின் பேரில் சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News