செய்திகள்
தீ விபத்தில் சேதமான வீடுகள்.

மயிலாடுதுறையில் தீ விபத்து- 5 குடிசை வீடுகள் எரிந்து சேதம்

Published On 2019-07-21 10:50 GMT   |   Update On 2019-07-21 10:50 GMT
மயிலாடுதுறையில் தீ விபத்தில் 5 குடிசை வீடுகள் எரிந்து நாசம் ஆனது. இதில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமானதாக கூறப்படுகிறது.

மயிலாடுதுறை:

மயிலாடுதுறை தருமபுரம் எல்.பி நகர் ஆலமரத்தடி பகுதியில் விவசாய கூலித் தொழிலாளர்கள் குடியிருப்பு உள்ளது. இங்கு பலர் குடிசை வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை திடீரென அப்பகுதியில் உள்ள காமராஜ் என்பவரது வீட்டில் தீப்பிடித்தது. அப்போது காற்று பலமாக வீசியதால் அருகில் உள்ள கணேசன், குமார், முருகன், புனிதவள்ளி ஆகியோரது வீடுகளிலும் தீப்பிடித்தது. இதுபற்றி மயிலாடுதுறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் நிலைய அலுவலர் அன்பழகன் தலைமையில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர்.

இருந்த போதிலும் 5 பேரின் குடிசை வீடுகளும் முற்றிலும் எரிந்து போனது. இதில் வீட்டில் இருந்த பொருட்களும் எரிந்து சேதமானது. மொத்தம் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமானதாக கூறப்படுகிறது. மின்கசிவால் இந்த தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News