செய்திகள்
கைது

நாகையில் ரவுடி பட்டியலில் உள்ள 5 வாலிபர்கள் கைது

Published On 2019-07-13 11:49 GMT   |   Update On 2019-07-13 11:49 GMT
நாகையில் ரவுடி பட்டியலில் உள்ள 5 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் உத்தரவுப்படி மாவட்டம் முழுவதும் குற்றங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி போலீஸ் நிலையங்களில் ரவுடி பட்டியலில் பெயர் உள்ள நாகை மருந்து கொத்தன பகுதி கேசவன் மகன் அலெக்ஸ்பாண்டியன் (வயது 25), நாகை வடக்கு தெரு தனபால் சிங்காரவேல் (25), பாலு (47) மயிலாடுதுறை அண்ணா நகர் வடக்கு தெரு விஜயேந்திரன் மகன் அஜித் குமார் (22) சேந்தங்குடி தென்பாதியை தெரு அழகேசன் மகன் அருண் பாண்டியன் (23) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News