செய்திகள்
கறம்பக்குடி அருகே குடிசை வீடு எரிந்து நாசம்
கறம்பக்குடி அருகே குடிசை வீடு எரிந்து நாசம் ஆனது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆலங்குடி:
கறம்பக்குடி அருகேயுள்ள அம்புக்கோவில் கனடியன்பட்டி தெருவைச்சேர்ந்தவர் பாலையா(52). விவசாயி. இவர் நேற்று வீட்டில் தூங்கினார். அப்போது திடீரென அவரது குடிசை வீடு தீப்பிடித்து எரிந்தது.
இது குறித்து தகவல் அறிந்ததும் கறம்பக்குடி தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். அதற்குள் குடிசை வீடு முழுவதும் எரிந்து நாசம் ஆனது.
இது குறித்து கறம்பக்குடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.