செய்திகள்
ஆலங்குடி அருகே அனுமதியின்றி மதுவிற்ற பெண் உள்பட 2 பேர் கைது
ஆலங்குடி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அனுமதியின்றி மதுவிற்ற பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி மது விலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு அனுமதியின்றி மதுவிற்கப்படுவதாக தகவல் வந்தது. இதைத் தொடர்ந்து மது விலக்கு பிரிவு இன்ஸ் பெக்டர் லதா தலைமையில் போலீசார் ஜெகதாப்பட்டினம் பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அதே பகுதி செல்லனேந்தல் கம்மாக்கரை பகுதியை சேர்ந்த ராமாயி (58) என்ற பெண்அனுமதியின்றி வெளிமாநில மதுபானங்களை கடத்தி வந்து விற்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் ராமாயியை கைது செய்தனர். அவரிடமிருந்து 304 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதைப்போல் அறந்தாங்கி- பட்டுகோட்டை சாலை அண்ணாசிலை அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மடக்கி சோதனை செய்தனர். அப்போது காரில் வெளிமாநில மதுபானங்கள் 33 இருப்பது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து காரை ஓட்டி வந்த அறந்தாங்கி அண்ணா நகரை சேர்ந்த சுப் பிரமணியன் (32) என்பவரை கைது செய்தனர். இவர்கள் 2 பேரும் மீதும் ஆலங்குடி மதுவிலக்கு பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.