செய்திகள்

வாணியம்பாடி அருகே புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை

Published On 2019-06-24 11:19 GMT   |   Update On 2019-06-24 11:58 GMT
வாணியம்பாடி அருகே திருமணமான 2 வாரத்தில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடி:

வாணியம்பாடி மேட்டுபாளையம் தெருவை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் தீபிகா (வயது 25). இவருக்கும் நெட்டு குந்தி கிராமத்தை சேர்ந்த நவீன்குமார் என்பவருக்கும் கடந்த 2 வாரத்திற்கு முன்பு திருமணம் நடந்தது.

தீபிகா நேற்று தனது தாய் வீடான மேட்டுபாளையத்திற்கு வந்தார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வீட்டிக்கு வந்த பெற்றோர் கதறி கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். உடனே அவரை மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

திருமணமாகி 2 வாரங்களே ஆகிய நிலையில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து வாணியம்பாடி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News