செய்திகள்

ஓடும் ரெயிலில் பெண்ணிடம் நகை திருடிய வாலிபர் கைது

Published On 2019-06-22 12:01 GMT   |   Update On 2019-06-22 12:01 GMT
அரக்கோணம் அருகே ஓடும் ரெயிலில் பெண்ணிடம் நகை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரக்கோணம்:

அரக்கோணம் பஜார் தெருவில் உள்ள நகை கடையில் நேற்று ஒரு வாலிபர் நகை அடகு வைக்க வந்தார். அவர் மீது சந்தேகமடைந்த கடை உரிமையாளர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் பச்சையம்மாள் மற்றும் போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் தண்டையார்பேட்டையை சேர்ந்த மணிகண்டன் (வயது 23) என்பது தெரியவந்தது.

கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருத்தணியில் இருந்து சென்னைக்கு ரெயிலில் வந்த ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த ராணியம்மாள். என்பவரிடம் 6 பவுன் நகையை திருடியதை ஒப்புக் கொண்டார்.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து மேலும் ஏதேனும் திருட்டில் சம்பந்தபட்டுள்ளாரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News