செய்திகள்

ராணிப்பேட்டை அருகே பிறந்து 10 நாட்களே ஆன ஆண் குழந்தை தெருவில் வீச்சு

Published On 2019-06-22 11:53 GMT   |   Update On 2019-06-22 11:53 GMT
வாலாஜா அருகே பிறந்து 10 நாட்களே ஆன ஆண் குழந்தை தெருவில் வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

வாலாஜா:

ராணிப்பேட்டை சிப்காட் ஐ.ஓ.பி. நகரில் இன்று காலை நாய்கள் குரைத்த படியும் காகங்கள் கரைந்தபடி இருந்தன. மேலும் குழந்தையின் அழுகுரல் கேட்டது. அந்த வழியாக நடந்து சென்றவர்கள் சத்தம் கேட்டு அங்கு சென்று பார்த்தனர். அப்போது பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தை தொப்புள் கொடி கூட சரியாக அறுக்கபடாத நிலையில் கிடந்தது.

இது குறித்து பொதுமக்கள் சிப்காட் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குழந்தையை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு முதல் உதவி அளிக்கப்பட்டது.

பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு தொடர் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. குழந்தையை வீசி சென்றது யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்பது குறித்தும், கடந்த 2 வாரங்களில் குழந்தையை ஆஸ்பத்திரியில் பெற்றேடுத்தவர்கள் விபரம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News