செய்திகள்

ராணிப்பேட்டை அருகே பெல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2019-06-18 10:27 GMT   |   Update On 2019-06-18 10:27 GMT
ராணிப்பேட்டை அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
வாலாஜா:

ராணிப்பேட்டை சிப்காட்டில் உள்ள பெல் நிறுவனம் நுழைவு வாயில் முன்பு பொதுசெயலாளர் பாண்டியன் தலைமையில் பெல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஆண்டு தோறும் வழங்கும் மே மாத ஊக்க தொகையை கால தாமதமின்றி வழங்க கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஞானசேகர், கந்தன், செந்தில்குமார், நந்தகுமார் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கோ‌ஷம் எழுப்பினர்.
Tags:    

Similar News