செய்திகள்

அரியலூர் ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல அனுமதி அளிக்க வேண்டும்- தேமுதிக வலியுறுத்தல்

Published On 2019-06-12 16:33 GMT   |   Update On 2019-06-12 16:33 GMT
அரியலூர் ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல மத்திய அரசு அனுமதி அளிக்க கோரி தேமுதிக வலியுறுத்தியுள்ளது.

அரியலூர், ஜூன். 12-

அரியலூர் மாவட்ட தே.மு.தி.க. ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் அரியலூர் மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் ராம.ஜெயவேல் தலைமையில் நடைபெற்றது. நகர செயலாளர் தாமஸ் ஏசுதாஸ் வரவேற்று பேசினார். மாவட்ட துணை செயலாளர் எழிலரசன், பொதுக்குழு உறுப்பினர் கலியமூர்த்தி, மாவட்ட மாணவரணி செயலாளர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செய லாளர்கள் திருமானூர் ராஜ்குமார், ஜெகதீசன், தா.பழுர் அறிவழகன், ஆண்டிமடம் குமாரதேவன், அரியலூர் மணிகண்டன், செந்துறை செல்வராஜ், ஜெயங் கொண்டம் நகர செயலாளர் ரவி, உடையார்பாளையம் பேரூராட்சி செயலாளர் முனியசாமி கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் 2-வது முறையாக பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரி விக்கப்பட்டது. அனைத்து ஏரி, குளம் , வாய்க்கால்கள் அனைத்தையும் தூர்வார வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து வார்டுகள், கிளைகளில் கட்சி கொடி யேற்றி புதிய பெயர் பலகை திறந்து வைக்க வேண்டும், அரியலூர் பேருந்து நிலையத்தில் 24மணி நேரமும் காவலர்களை நியமிக்க வேண்டும், பேருந்து நிலையத்தில் குடிநீர் தொட்டி அமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். பேருந்து நிலையத்தில் உள்ள மின்விளக்குகள் சரியாக பயன்பாட்டில் இல்லை. அதைசீர் செய்திட வேண்டும். அரியலூர் ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. முடிவில் ஒன்றிய பொருளாளர் சசிகுமார் நன்றி கூறினார்.

Tags:    

Similar News