செய்திகள்

தேனி அருகே டாஸ்மாக் கடையில் மாமுல் கேட்டவர் கைது

Published On 2019-05-29 18:16 GMT   |   Update On 2019-05-29 18:16 GMT
தேனி அருகே டாஸ்மாக் கடையில் மாமுல்கேட்டு மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.

தேனி:

தேனி அருகே தேவாரம் பெருமாள்பட்டியை சேர்ந்தவர் மாரிச்சாமி(வயது44). இவர் திடீர்புரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று வேலையில் இருந்த போது லட்சுமிநாயக்கன்பட்டியை சேர்ந்த செல்வேந்திரன்(வயது32) என்பவர் மாரிச்சாமியிடம் மாதந்தோறும் ரூ.15ஆயிரம் மாமுல்தரவேண்டும் என கூறியுள்ளார்.

இதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே பணம் தராவிட்டால் பிரச்சினை ஏற்படும் என அவரை மிரட்டியுள்ளார். இதுகுறித்து தேவாரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து செல்வேந்திரனை கைது செய்தனர்.

Tags:    

Similar News