செய்திகள்

கோவை அருகே தாய் இறந்த துக்கத்தில் தொழிலாளி தற்கொலை

Published On 2019-05-29 11:29 GMT   |   Update On 2019-05-29 11:29 GMT
கோவை அருகே தாய் இறந்த துக்கத்தில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து துடியலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை:

கோவை அருகே உள்ள பன்னிமடை முல்லை நகரை சேர்ந்தவர் தாமரை கண்ணு (52). தொழிலாளி. இவரது தாய் கடந்த 20 நாட்களுக்கு முன் வயது முதிர்வு காரணமாக மரணம் அடைந்தார். இதனால் தாமரை கண்ணு மன வருத்தத்தில் இருந்தார். தாய் இறந்த துக்கத்தில் வி‌ஷம் குடித்து விட்டார். மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பலன் இன்றி தாமரை கண்ணு இறந்தார். இது குறித்து துடியலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News