செய்திகள்

சாயர்புரத்தில் பேனர் வைப்பதில் தகராறு- வாலிபர் மீது வழக்கு

Published On 2019-05-27 18:19 GMT   |   Update On 2019-05-27 18:19 GMT
சாயர்புரத்தில் கோவில் திருவிழாவில் பேனர் வைப்பதில் ஏற்பட்ட தகராறில் 3 பேரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
சாயர்புரம்:

சாயர்புரம் புது நகரை சேர்ந்தவர் முருகன் மகன் மாதேஷ் (வயது21). அதே பகுதியை சேர்ந்தவர் நவீன்குமார் (24). அங்கு நடை பெற்ற சந்தன மாரியம்மன் கோவில் திருவிழாவில் பேனர் வைக்கப்பட்டது. அதில் நவீன்குமார் படம் இடம் பெறவில்லை. 

இதுகுறித்து ஆனந்த ராமன், மாதேஷ், பொன் மாணிக்கம் ஆகியோரிடம் எனது படம் ஏன் பேனரில் சேர்க்கவில்லை என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றவே 3 பேரையும் நவீன்குமார் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

காயம் அடைந்த 3 பேரும் சாயர்புரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் நவீன்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News