செய்திகள்
குடவாசல் அருகே இளம்பெண் தற்கொலை- போலீசார் விசாரணை
குடவாசல் அருகே செல்போனில் பேசியதை பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர்:
குடவாசலை அடுத்த புளிச்சகாடியை சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மகள் கங்கா (வயது 24). இவர் அடிக்கடி செல்போனில் பேசியபடி இருந்துள்ளார். இதனை பாஸ்கரன் கண்டித்துள்ளார். இதில் மனவேதனை அடைந்த கங்கா விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை மீட்டு திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றிய புகாரின் பேரில் குடவாசல் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
குடவாசலை அடுத்த புளிச்சகாடியை சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மகள் கங்கா (வயது 24). இவர் அடிக்கடி செல்போனில் பேசியபடி இருந்துள்ளார். இதனை பாஸ்கரன் கண்டித்துள்ளார். இதில் மனவேதனை அடைந்த கங்கா விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை மீட்டு திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றிய புகாரின் பேரில் குடவாசல் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.