செய்திகள்

மாமல்லபுரம் அருகே கார் மீது மோட்டார் சைக்கிள் மோதல் - 2 பேர் பலி

Published On 2019-05-22 08:19 GMT   |   Update On 2019-05-22 08:19 GMT
மாமல்லபுரம் அருகே கார் மீது மோட்டார் சைக்கிள் மோதலில் 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்த வருகின்றனர்.

திருப்போரூர்:

புதுச்சேரி பந்துரெட்டி புரத்தைச் சேர்ந்தவர் தினேஷ் (21). இவருடைய நண்பர் ரஞ்சித்குமார் (24).

நேற்று இரவு தினேஷ், ரஞ்சித்குமார் இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தனர். கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரத்தை அடுத்த கடும்பாடி அருகே மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தது.

இரவு 10 மணியளவில் சென்னையில் இருந்து புதுச்சேரியை நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு கார் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் 2 வாலிபர்களும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.

இதில் படுகாயம் அடைந்த தினேஷ், ரஞ்சித்குமார் இருவரும் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிர் இழந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் மாமல்லபுரம் போலீசார் விரைந்து சென்று விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News