செய்திகள்

நாகாவதி அணையில் குளிக்க சென்ற சப்-இன்ஸ்பெக்டர் மகன் நீரில் மூழ்கி பலி

Published On 2019-05-13 15:13 GMT   |   Update On 2019-05-13 15:13 GMT
நாகாவதி அணையில் நண்பர்களுடன் குளிக்க சென்ற சப்-இன்ஸ்பெக்டர் மகன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான்.
தர்மபுரி:

தர்மபுரி நியூகாலனி பகுதியைச் சேர்ந்தவர் சின்னசாமி. இவர் ஒகேனக்கல் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். 

இவரது மகன் விமல்ராஜ் (வயது 27). இவர் எம்.எஸ்சி. வரை படித்து விட்டு வேலை தேடிவந்தார். விமல்ராஜ் தனது நண்பர்கள் 10 பேருடன் காரில் நேற்று இண்டூர் அருகே உள்ள நாகாவதி அணைக்கு சென்றனர். 

அங்கு தனது நண்பர்களுடன் விமல்ராஜ் ஆற்றின் கரையோர பகுதிகளில் குளித்தார். சிறிது நேரத்தில் ஆழமான பகுதிக்கு சென்றார். அப்போது அவர் காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டார். உடனே அவரது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்து விமல்ராஜை காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆனால் அதற்குள் அவர் நீரில் மூழ்கி இறந்து போனார்.

இதுகுறித்து அவர்கள் விமல்ராஜ் குடும்பத்தினருக்கும், இண்டூர் போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். போலீசார் உடனே சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். இதில் விமல்ராஜுக்கு நீச்சல் தெரியாததால் ஆழமான பகுதிக்கு சென்றபோது நீரில் மூழ்கி மூச்சு திணறி இறந்தது தெரியவந்தது.

போலீசார் உடனே ஆற்றில் இறங்கி விமல்ராஜின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அப்போது அவரது உடலை பார்த்து உறவினர்கள், நண்பர்கள் கதறி அழுதனர். இண்டூர் போலீசார் விமல்ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News