செய்திகள்

குண்டல்பட்டியில் உப்பு பாரம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து

Published On 2019-05-13 14:50 GMT   |   Update On 2019-05-13 14:50 GMT
குண்டல்பட்டியில் இன்று உப்பு பாரம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது. இதில் டிரைவர், கிளீனர் ஆகிய 2 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
தருமபுரி

சேலத்தில் இருந்து உப்பு பாரம் ஏற்றி கொண்டு லாரி தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரி நோக்கி சென்று கொண்டிருந்தது.

அந்த லாரி இன்று காலை தருமபுரி அடுத்துள்ள குண்டல்பட்டி அருகே வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக சாலையில் கவிழ்ந்தது.  

இதில் லாரியில் இருந்த உப்பு மூட்டைகள் சாலையில் சிதறியது. இதில் டிரைவர், கிளீனர் ஆகிய 2 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மதிக்கோண்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News