செய்திகள்
தொப்பூர் அருகே இரும்பு கம்பி பாரம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து டிரைவர் பலி
தொப்பூர் அருகே இன்று அதிகாலை இரும்பு கம்பி பாரம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்த விபத்தில் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தர்மபுரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் இருந்து இரும்பு கம்பி பாரம் ஏற்றி கொண்டு லாரி மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தது.
இந்த லாரியில் தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் ரோடு பகுதியை சேர்ந்த பொன் ராஜ் (வயது41) என்பவர் டிரைவராகவும், மகாராஜன் கிளீனராகவும் இருந்தனர்.
இன்று அதிகாலை தருமபுரி அடுத்துள்ள தொப்பூர் கணவாய் மத்திய நார்த்தங்கால் பகுதியில் சென்ற போது லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.
இதில் லாரி டிரைவர் பொன்ராஜ் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். கிளீனர் மகாராஜனுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தொப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் விபத்தில் பலியான பொன்ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து விபத்தில் சிக்கிய லாரியை போலீசார் கிரேன் மூலம் அப்புறப்படுத்தினர். இதனால் தொப்பூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் இருந்து இரும்பு கம்பி பாரம் ஏற்றி கொண்டு லாரி மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தது.
இந்த லாரியில் தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் ரோடு பகுதியை சேர்ந்த பொன் ராஜ் (வயது41) என்பவர் டிரைவராகவும், மகாராஜன் கிளீனராகவும் இருந்தனர்.
இன்று அதிகாலை தருமபுரி அடுத்துள்ள தொப்பூர் கணவாய் மத்திய நார்த்தங்கால் பகுதியில் சென்ற போது லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.
இதில் லாரி டிரைவர் பொன்ராஜ் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். கிளீனர் மகாராஜனுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தொப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் விபத்தில் பலியான பொன்ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து விபத்தில் சிக்கிய லாரியை போலீசார் கிரேன் மூலம் அப்புறப்படுத்தினர். இதனால் தொப்பூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.