செய்திகள்

அருப்புக்கோட்டை அருகே ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 3 வாலிபர்கள் சிக்கினர்

Published On 2019-05-11 16:43 IST   |   Update On 2019-05-11 16:43:00 IST
அருப்புக்கோட்டை அருகே ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள தமிழ்பாடி- கருங்குளம் சாலையில், போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அங்குள்ள தனியார் நூற்பு மில் அருகே வந்தபோது 6 பேர் சந்தேகத்திற்கிடமாக நின்றனர்.

அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, முன்னுக்கு பின் முரணாக பேசினர். அப்போது 3 பேர் அங்கிருந்து ஓட்டம் எடுத்தனர்.

இதனால் சுதாரித்துக் கொண்ட போலீசார் மற்ற 3 பேரையும் பிடித்து விசாரித்தனர். அவர்களை சோதனை செய்தபோது 3 மிளகாய் தூள் பாக்கெட்டுகள், கத்தி மற்றும் 25 அடி நீள கயிறு இருப்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து 3 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் ராமநாதபுரத்தைச் சேர்ந்த முத்துக்குமார் (வயது 21), முருகேசன் (21), மண்டல மாணிக்கம் முருகன் என தெரியவந்தது.

மேலும் தப்பி ஓடியவர்கள் திருச்சுழி அஜித் (24), ராமநாதபுரம் மணி வண்ணன் (24), முத்துப்பட்டி முத்தமிழ் செல்வம் (24) ஆகும். இவர்கள் வழிப்பறி அல்லது கொள்ளை சம்பவத்தில் ஈடுபட திட்டமிட்டு இருந்தார்களா? என தீவிர விசாரணை நடக்கிறது.

Tags:    

Similar News